வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் செயலாக அமையும் என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளியை பின்பற்றி திறந்திட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

Related Stories: