சென்னை: 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் பி.நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள அண்ணாதுரை வேளாண்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.