புதுடெல்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, இம்மாதம் 26ம் தேதி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையின் முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் இவர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. அதன் பிறகு, கொரோனா பரவல் காரணமாக டெல்லி தொடர் போராட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இந்த சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தை தொடங்கி இம்மாதம் 26ம் தேதியுடன் 7 மாதங்கள் முடிகிறது.