×

பெண் போலீஸ் பாலியல் புகார் கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்

ஊட்டி: பாலியல் புகாரில்நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்தவர் சார்லஸ். இவர், இதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர், தமிழக அரசு தலைமை செயலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் எஸ்பி சார்லஸ்,  பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கூடுதல் எஸ்பி சார்லசை, கோவை டிஐஜி அலுவலகம் அதிரடியாக  சஸ்பெண்ட் செய்து  உத்தரவு பிறப்பித்தது. மேலும், இவர் விசாரணை காலம் முடியும் வரை நீலகிரி மாவட்டம் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Female police sex complaint Additional SP suspended
× RELATED ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு...