இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 30 பேர், 10 நாட்டு படகுகள் மூலம் நேற்றுமுன்தினம் காலை மீன் பிடிக்க சென்றனர். மதியம் 12 மணி அளவில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் திடீரென அங்கு வந்தனர். அவர்கள், மீனவர்கள் படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஐஸ்பாக்ஸ் பெட்டிகளை கடலில் தூக்கி எறிய சொல்லி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வலைகளை அறுத்தும், ஐஸ் பாக்ஸ்களை கடலில் தூக்கியும் போட்டனர். பின்னர் படகுகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கரை திரும்பினர். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் இங்கிருந்து உடனே போகாவிட்டால் சுட்டுவிடுவோம் என்று துப்பாக்கியை தூக்கி பிடித்தனர். இதனால் நாங்கள் உயிருக்கு பயந்து கரை திரும்பினோம் என்றனர்.

Related Stories: