ஸ்ரீநகர்: காஷ்மீரில் அரசு நிகழ்ச்சியின்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ் அதிகாரிகளுடன் பொதுமக்களில் இருவரும் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் மக்களுடன் மக்களாக தீவிரவாதிகள் கலந்து இருப்பதால், அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் பாதுகாப்பு படைகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும், புதிது புதிதாக தீவிரவாதிகள் திடீரென உருவாவதும் பாதுகாப்பு படைகளுக்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற திடீரென முளைக்கும் தீவிரவாதிகள், சாதாரணமாக மக்கள் போல் சென்று சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.