புதுடெல்லி: டொமினிகா நாட்டு உயர் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டு தப்பிய பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்தியை இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து விசாரிப்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான முயற்சியில் சிபிஐ, அமலாக்கத் துறை போன்றவை ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், ஆன்டிகுவா நாட்டு குடியுரிமையை பெற்று வசித்து வந்த மெகுல் சோக்சி, கடந்த மாதம் 23ம் தேதி டொமினிகா நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.