நியூயார்க்: உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், 21 பிரிவுகளில் புலிட்சர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனில் வசிக்கும் மேகா ராஜகோபாலன் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக இந்த விருதை பெறுகிறார். இதேபோல், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பத்திரிகையாளர் நைல் பேடி உள்ளூர் செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார். இவர் வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.