திருவனந்தபுரம்: நாடு முழுவதும் மாநிலங்களுக்கு 25.60 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே கேரளாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு கொள்கிறனர். கேரளாவில் 1,000 ஆண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது, பெண்களில் 1,087 பேர் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.