உலகம் இயக்குநர் ஆயிஷா மீது தேச துரோக வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு!: லட்சத்தீவு பா.ஜ.க-வில் இருந்து 15 நிர்வாகிகள் விலகல்..!! Jun 12, 2021 ஆயேஷா இலட்சத்தீவுகள் பாஜக கவரத்தி: திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு போடப்பட்டதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் லட்சத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகளுக்கு எதிராக திரைப்பட இயக்குனரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா தெரிவித்த கருத்து விவாதத்திற்கு உள்ளானது. இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆயிஷா சுல்தானா மீது தவறான மற்றும் அநீதியான முறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே லட்சத்தீவில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர், பாஜகவினர் மற்றும் அக்கட்சியோடு தொடர்புடையவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!