குற்றம் சென்னையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!: போலீசார் அதிரடி..!! Jun 12, 2021 சென்னை சென்னை: சென்னையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கரும்பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டிடம் அருகே கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ஆம்போடெரிசின் மருந்துகளை விற்பனை செய்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த உம்மு குல்சம், கானாத்தூரை சேர்ந்த பௌஸானா, காட்டாங்குளத்தூரை சேர்ந்த விவேக் மற்றும் செஞ்சியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எட்டு குப்பிகள் ஆம்போடெரிசின் மருந்தை பறிமுதல் செய்த போலீசார், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆம்போடெரிசின் மருந்தினை பெங்களூருவில் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னையில் 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை