நாட்டு துப்பாக்கியை காட்டி மனைவியை மிரட்டியவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை கிராமம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கர்ணன்(40). இவரது மனைவி விஜயா(35). விஜயா கிருஷ்ணாபுரம் அரசுத் தலைமை மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். கர்ணனுக்கும், விஜயாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்றும் அதேபோல் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  ஆத்திரமடைந்த கர்ணன் வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மனைவி விஜயாவை பார்த்து என்னிடம் தொடர்ந்து தகராறு செய்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி விஜயா அரும்பாவூர் போலீசில் கணவர் மீது புகார் செய்தார். அதன்பேரில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து கர்ணனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இவர் வன விலங்கு வேட்டைக்காக அனுமதி பெற்று நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: