தமிழகம் தமிழகத்தில் பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை!: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்..!! Jun 12, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நாமக்கல்: தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிரடியாக நடைபெற்ற சோதனையில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரித்த போது, ஓசூரை சேர்ந்த இருவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் 1,020 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கொரோனா பாதிப்பு இருப்பதாக நாடகமாடி ஓசூரில் இருந்து கரூருக்கு இருவரும் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் தக்காளி கூடைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மதுபாட்டில்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சிவா மற்றும் சையது அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது இன்று முதல் 30ம் தேதி வரை 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: கன்னியாகுமரி, நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு
அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்களிடம் 10 மணிநேரம் விசாரணை: அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி, பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி
மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சி பிரிவினைவாத பேச்சு அடிப்படையில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தண்டனை எந்த சூழலிலும் குழந்தைகளை நல்வழிப்படுத்தாது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதியை அமல்படுத்த வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு