தமிழகம் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் கடன் தவணையை கட்டாய வசூல் செய்யக்கூடாது!: நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!! Jun 12, 2021 நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் கடன் தவணையை கட்டாய வசூல் செய்யக்கூடாது என்று நிதி நிறுவனங்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு காவல் நிலையத்தில் தனியார் நிதி நிறுவனங்களுடன், துணை கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா காலத்தில் பொதுமக்களை கடன் தவணை செலுத்த நிர்பந்தம் செய்ய கூடாது என்று அறிவுறுத்தினார். பொதுமக்களிடம் கடன் வசூலிப்பதில் அடாவடி போக்கை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட்டிக்கு வட்டி என்று கூடுதல் வட்டி கேட்க கூடாது என்றும் பொதுமக்களின் நிதி நிலைமையை அறிந்து மென்மையாக போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களிடம் கட்டாயம் வசூலில் ஈடுபட மாட்டோம் என்று தனியார் நிதி நிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் தனியார் நிதியை நிறுவனங்கள் கடனை கேட்டு அடாவடியில் ஈடுபடுவதாக பல்வேறு இடங்களில் புகார் எழுந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்
கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: வரும் கல்வியாண்டு முதல் ஒற்றைச் சாளர முறை அமல்
உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முத்தரசன் இரங்கல்
மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம் வழங்க சான்றிதழ் அவசியம்: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு!!
உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும்