ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-ஆக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை ரூ.80,000 கோடி சம்பளம்

கலிஃபோர்னியா: ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-ஆக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80,000 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் டேக் நிறுவன சிஇஓ-க்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஸூக்கர்பெர்க் இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பங்குகள் மற்றும் பணமாக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் அதனை தொடர்ந்து அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் ஆகியவற்றின் சிஇஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சை 80,000 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 2015 முதல் 2020 வரையான 5 ஆண்டுகளுக்கு பங்குகள் இழப்பீடுகள் பணம் என இந்த தொகை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: