ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர், வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபோர் என்ற மாவட்டத்தில் அரம்போரா பகுதியில் இன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.