டொமினிகா: இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் மெகுல் சோக்சி வேறு நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி டொமினிகா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது . பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி அவர் ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தை நாடினார்.