பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைகிறது. இதனால், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும்  முறை குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* 10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (O2) அளவை சரிபாக்கவும்

* கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.

* ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும்.

* கருவியில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.

* சில விநாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும்.

* விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குழுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்.

* ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.

* தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும். மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையம் 104 அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: