நோயாளிகளை சந்திக்க மருத்துவமனையில் உறவினர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை:  சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்,கொரோனா நோயாளிகளுடன் உறவினர்களுக்கு அனுமதி இல்லை என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பொதுமக்கள்,  மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், மருத்துவமனை நிர்வாகம் பேச்சு நடத்திய பின்னர் கலைந்து சென்றனர். இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன்  கூறுகையில், கொரோனா  நோயாளியை கவனித்துக்கொள்ள, ஒரு உறவினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டை வைத்து, வேறு சில உறவினர்களும் வந்து பார்த்து செல்கின்றனர். இவர்கள், வெளியே சென்று சமுதாயத்தில் தொற்றை  பரப்பக்கூடியவர்களாக உள்ளனர். இதனால், உறவினர்கள் அனுமதிக்கவில்லை.

Related Stories: