முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அனுப்பினார் அன்புமணி

சென்னை: பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:  கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கும்படி தாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து, பாமக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

Related Stories: