அவனியாபுரம்: நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தியாகிறதோ அங்கிருந்து கொண்டு வர தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 காலி ஆக்சிஜன் டேங்கர்கள், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்தடைந்தன.