ஜெட் வேகத்தில் கொரோனா பரவல்: விழி பிதுங்கும் தமிழக மக்கள்: ஒரே நாளில் 33,059 பேர் பாதிப்பு..! மேலும் 364 பேர் உயிரிழப்பு

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 52லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 79ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 33,059 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16லட்சத்து 64ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,42,929ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 18,718பேர் ஆண்கள், 14,341பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6,016பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 364பேர் உயிரிழந்துள்ளார். 172பேர் தனியார் மருத்துவமனையிலும், 192பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369ஆக அதிகரித்துள்ளது. இன்று 21,362பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: