சென்னை வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!: சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு தொற்று உறுதி..!! May 18, 2021 விசேட சிறுவர் காப்பகம் சென்னை சென்னையில் சிறப்பு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ள தனியார் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர். உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பலர் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியில், சிறப்பு குழந்தைகளுக்கு என தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 10 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 172 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8 ஊழியர்கள் மூலம் சிறப்பு குழந்தைகள் அனைவரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் காப்பகத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சி உள்ளது. இதில் பாடம் நடத்த வரும் ஆசிரியர் ஒருவர் மூலமே கொரோனா பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அதுக்குள்ள சட்டமன்ற தேர்தலுக்கு போயிட்டாங்க தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அன்புமணியா – அண்ணாமலையா? கொடுங்கையூர் நிகழ்ச்சியில் பாமக-பாஜ காரசார விவாதம்
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு விடுவிக்ககோரிய மனு மீது மீண்டும் வாதிட கோரிக்கை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரி ஏரியின் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்வதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல்
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்