தமிழகம் கொரோனா பாதித்தவரை ஆக்சிஜன் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த வைகோ மகன்!: பொதுமக்கள் பாராட்டு..!! May 18, 2021 Viko விருதுநகர்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு முகாமை பார்வையிட சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, கொரோனா நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இலவசமாக அம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சிலிண்டருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் சென்றனர். அப்போது அய்யனாபுரம் திமுக கிளை செயலாளர் அடைக்கலம் என்பவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக துரை வைகோ மற்றும் டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ. இருவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆக்சிஜனுடன் முதலுதவி செய்து அந்த ஆம்புலன்ஸிலேயே கொண்டு போய் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் மூன்றாண்டு ஆட்சியில் ஒளிரும் தமிழகம்: பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு; பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார பொதுக்கூட்டம்; பாஜ ஆட்சியால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் இறப்பதாக தகவல்: பொதுசுகாதாரத்துறை ஆய்வு முடிவு
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடரலாம் என்ற தீர்ப்பு நகல் எங்கே?: தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்- செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வீட்டில் பறக்கும் படை சோதனை
யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவியாக இருந்த நான் முதல்வன் திட்டம் தாயுள்ளம் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பிரசாந்த் நன்றி
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு