சென்னை முதலமைச்சர் கொரோனா நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி நிதி!: தலைமை செயலாளரிடம் நேரில் வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!! May 18, 2021 நிதி முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் பிரதம செயலாளர் சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் நிதிக்கான காசோலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு-விடம் நேரில் வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இறையன்பு-வை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினருமான ஜெயக்குமார் காசோலையை வழங்கினார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெயக்குமார், முதலமைச்சர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டிற்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும் உரிய நிவாரணங்களை வழங்கவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக அந்த கட்சி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இதனிடையே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, கொரோனா நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறார். சிறைவாசிகள் வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க சிறை கண்காணிப்பாளரிடம் அவர் கடிதம் வழங்கியுள்ளார்.
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அதுக்குள்ள சட்டமன்ற தேர்தலுக்கு போயிட்டாங்க தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அன்புமணியா – அண்ணாமலையா? கொடுங்கையூர் நிகழ்ச்சியில் பாமக-பாஜ காரசார விவாதம்
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு விடுவிக்ககோரிய மனு மீது மீண்டும் வாதிட கோரிக்கை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரி ஏரியின் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்வதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல்
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்