டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கணவர் இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், மனைவி இறந்தால் அது கணவருக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இறந்தால்,பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.