சென்னை சீனா, அமெரிக்கா ஹாங்காங்கில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சரக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது..!! May 18, 2021 ஹாங்காங் சீனா அமெரிக்கா சென்னை சென்னை: சீனா, அமெரிக்கா ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சரக்கு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்துள்ளன. கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கையை எடுத்துள்ள தமிழக அரசு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் பெற போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆக்சிஜன் தயாரிப்பதற்கான 52 கருவிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளன. சீனா, ஹாங்காங் நாடுகளில் இருந்து 2 சரக்கு விமானங்கள் மூலம் 51 ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரங்களும், அமெரிக்காவில் இருந்து ஒரு சரக்கு விமானம் மூலம் 1 ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரமும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. வரும் நாட்களில் மேலும் சில நாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்