முக்கிய செய்தி இந்தியா கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்!: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!! May 18, 2021 கொரோனா ஒடிசா புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை சுகாதார பணியாளர்கள் 3 மாதங்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார். கொரோனாவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும், கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று நவீன் பட்நாயக் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாகவும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளார். இதனிடையே கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். வைப்பு தொகைக்காக வட்டி தொகை குழந்தையையோ, அவர்களின் பாதுகாவலர்களையோ சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகளை மத்தியப்பிரதேசம் மற்றும் டெல்லி முதலமைச்சர்களும் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!
DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் ; 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பு!!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தியவர்: கணேசமூர்த்தி மறைவுக்கு வைகோ புகழஞ்சலி