உலகம் குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி!: 71 இடங்களுக்கு விமானங்களை இயக்க முடிவு..!! May 18, 2021 சவூதி அரேபியா ரியாத்: குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சவுதி அரேபியா மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்த இந்த தடையால் வெளிநாடுகளில் பயின்று வரும் சவூதி அரேபியா மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டனர். 3 கோடி மக்கள் தொகை கொண்ட சவூதியில், 1.1 கோடி பேருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சவூதி அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான சவுதியா, 43 சர்வதேச இடங்கள் உட்பட 71 இடங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது. அதேபோல், வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்