இந்தியா வயது மூப்பால் மரணமடைந்தார் கரிசல் எழுத்தாளர் கி.ரா.!: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி..!! May 18, 2021 புதுச்சேரி ஆளுநர் தமிசாய் ச und ந்தராஜன் புதுச்சேரி: லாஸ்பேட்டை குடியிருப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமிய கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்த முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கி.ராஜநாராயணன் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசை வழியை உருவாக்கி கொடுத்தவர் என்றும் கரிசல் இயக்கியத்தின் முன்னோடி கி.ராஜநாராயணன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 2009ல் மட்டும் கி.ராஜநாராயணனின் 30 புத்தகங்கள் வெளியாகி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு
காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம்
கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன் மூலம் வலைவீச்சு பஞ்சாப்பில் ஆபரேஷன் தாமரை தொடக்கம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன்
பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு