கும்பகோணம் அருகே யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 சிறுவர்கள் கைது!: போலீசார் அதிரடி..!!

கும்பகோணம்: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு சிறுவர்கள் தாங்கள் தயாரித்து வெடித்த வெடிகுண்டு காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு போலீசில் சிக்கி கொண்டனர். கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த ஹரி பாலாஜி என்ற சிறுவன் குற்றவழக்கில் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குல்ஜத் குமார் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது பற்றி அந்த இளைஞரிடம் இருந்து சிறுவன் தெரிந்து கொண்டுள்ளான். இதையடுத்து கடந்த 13ம் தேதி கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் சாலையில் யூடியூப் பார்த்து தயாரித்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். அதனை அவரது நண்பர் தமிழ்செல்வன் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வெடிகுண்டு தயாரித்த ஹரி பாலாஜி மற்றும் அதனை வீடியோ எடுத்த அவனது நண்பன் தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்க செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: