சென்னை: முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். கரிசல் குயில் என்று போற்றப்படும் கி.ராஜநாராயணன் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கோவில்பட்டி இடைச்செவலில் பிறந்து அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலை கதைகளாக்கி உலவவிட்டவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.