முக்கிய செய்தி இந்தியா கொரோனா தொற்று ஒருபுறம்; பணிச்சுமை மறுபுறம்!: நீண்ட நேர உழைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..WHO எச்சரிக்கை..!! May 18, 2021 டெல்லி: கொரோனா தொற்று ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, பணிச்சுமை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரை பறித்து வரும் சூழலில் நீண்ட நேரம் பணியாற்றுவது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2016ம் ஆண்டு அதிக நேரம் பணியாற்றிய 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழந்ததாக சர்வதேச சுற்றுச்சூழல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2000 ஆண்டை விட 30 விழுக்காடு அளவிற்கு இத்தகைய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. வாரம் ஒன்றிற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பணியாற்றுவது உடல் நலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவன இயக்குநர் மரியா நெய்ரா எச்சரித்துள்ளார். இதனை சரி செய்ய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம், உலக தொழிலாளர் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தவர்களில் 72 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் அவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசுபிக் நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று விளைவாக கூடுதல் நேரம் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய சூழலில் குறைந்தபட்சம் 9 விழுக்காட்டினர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், பணி நேரத்தை அதிகரிப்பது சரியான முடிவு அல்ல என்றும் பணி நேரத்தை குறைத்து அதிக உழைப்பை பெற முடியும் என்றும் சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு