சென்னை: பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கி.ராஜநாராயணன் மறைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் அவர் புதுச்சேரியின் மீது மாறாத பற்றும் அன்பும் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.