காரைக்குடி: காரைக்குடி மாவட்டம் தேவகோட்டையில் தாய் மற்றும் 2 மகள்கள் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தாய் ஷோபனா மற்றும் இளைய மகள் ஷிவானியுடன் உடல்கள் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மூத்த மகள் அபிராமி ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது.