சென்னை ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை!: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேர் கைது..!! May 18, 2021 சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அதே மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியரை தேடி வருகின்றனர். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த போதும், இவர் போலி ஆவணங்கள் மூலம் பல முறை மருந்து வாங்கியுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியரான மணி என்பவருடன் சேர்ந்து முகமது கலீல் என்பவரிடம் ஒரு குப்பி 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். திருவல்லிக்கேணியில் மருந்து கடை வைத்துள்ள இர்பான் என்பவரிடமும் இவர் மூலம் கைமாற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நோயாளி ஒருவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவை என விளம்பரம் செய்து அதற்கு யாரெல்லாம் பதிலளிக்கிறார் என கவனித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி ஆரிப் என்பவர், தன்னிடம் 25,000 ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்து இருப்பதாக கூறி விற்பனை செய்ய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, ஆரிப் கொடுத்த தகவலின் பேரில் மீதமுள்ள 5 பேரையும் கைது செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த மருந்தை வாங்க முடியாது. எனவே மருத்துவர்கள் யாரேனும் இதற்கு துணை போனார்களா? என்ற அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 16 தாசில்தார்களுக்கு தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு
குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும்: வாரியம் அறிவிப்பு
தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 5.86 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: சுற்றுலாத்துறை தகவல்