சொல்லிட்டாங்க...

கொரோனா 2வது அலை குறித்து முன்னெச்சரிக்கை செய்யவில்லை.  இதனால் கர்நாடகாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த அரசு தூங்கி கொண்டிருக்கிறதா? அல்லது செத்து விட்டதா. - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா

பிஎம் கேர் நிதியின் கீழ் மகாராஷ்டிராவுக்கு வந்த 5000 வென்டிலேட்டர்கள்,  4 மாதமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தன. எனவே வென்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளது. - மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னவிஸ்.

 வெளிநாடுகளுக்கு அதிகமாக தடுப்பூசி ஏற்றுமதி செய்த பிரதமர் மோடி உண்மையில் உலக தலைவர் தான். இந்தியர்கள் அனைவரும் நரகத்துக்கு செல்லுங்கள். - திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா

அதிகாரிகள் மூலம் கல்வித்துறையை  நிர்வகிக்க ஒன்றிய அரசு முயல்வது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

Related Stories: