காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் நகர் மாவட்டம் கோன்மோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று அந்த இடத்தை பாதுகாப்பு படையின் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது அடையாளம் மற்றும் பின்னணி குறித்து விசாரித்து வருவதுடன், தொடர்ந்து அந்த பகுதியை ராணுவ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: