கோமியம் குடிப்பதால் கொரோனா வரவில்லை: பாஜ எம்பி பிரக்யா தாகூர் அக்கப்போர்

போபால்: அறிவியல் பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு கேட்பதில்லை என்பதை பாஜ எம்பி பிரக்யா தாகூர் போன்ற சிலர் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். போபாலில் அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் தினமும் கோமியம் (மாட்டு மூத்திரம்) குடிக்கிறேன். அது கொரோனாவினால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை சரி செய்யும். எனக்கும் வலி இருந்தது, ஆனால் தினமும் நான் கோமியம் குடிப்பதால் வேறெந்த மருந்தும் எடுத்துக் கொள்வதில்லை. கொரோனாவாலும் நான் பாதிக்கப்படவில்லை. கோமியம் உயிர் காக்கும் மருந்து’’ என்றார்.  இப்படியான ஆதாரப்பூர்வமற்ற தகவலை பரப்ப வேண்டாம் என பல நிபுணர்கள் கூறியும் பாஜ தலைவர்கள் கேட்டபாடில்லை.

Related Stories: