போக்குவரத்து வாகனவரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9ம் தேதி முதல்வர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு

தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கு ஜூன் 30ம் தேதி காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதமில்லாமல் செலுத்தும் கடைசி தேதி மே 15ம் தேதியில் இருந்து ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள்.

Related Stories: