சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சென்னை நேரு மைதானத்துக்கு வர வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், மருந்துகள் பெற சிரமப்படுவதை போக்க கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலே ரெம்டெசிவிர் மருந்துகள் இன்று முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.