தண்டையார்பேட்டை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 228 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயாராகி வருகிறது. தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரசு தொற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையில் 5 வார்டுகள் அமைக்கப்பட்டு 75 ஆக்சிஜன் படுக்கைகளுடன் மிதமான மற்றும் மாறுபட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனை முழுவதுமே கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.