சென்னை: சார்ஜாவிலிருந்து நேற்று சென்னை வந்த சிறப்பு ஏர் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில், அவர்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். உடனடியாக சுங்கத்துறையினர் ஏர் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சோதனையிட்டனர். அப்போது, கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த பயணி முகமது அராபத் (24) மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரது சூட்கேஸ், பைகளை தீவிரமாக சோதித்தனர்.