சென்னை: பெண் முன்களப்பணியாளரிடம் அத்துமீறலில்ஈடுபட்ட கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் முன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தினசரி வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி பாரிமுனை அடுத்த முத்தியால்பேட்டை பிடாரி அம்மன் கோயில் தெருவில் பெண் முன்களப்பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் கடை நடத்தி வரும் சதக்கத்துல்லா (52) என்பவர், பெண் முன்களப்பணியாளரின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.