சென்னை: சென்னை ஐ.சி.எப்.பில் 15 அடி உயர நுழவைாயில் இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர் மற்றும் ஐசிஎப் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஐ.சி.எப் வளாகத்தில் உள்ள பர்னிசிங் பிரிவில் நேற்று மாலை 7 மணி அளவில் லோடு இறக்கி விட்டு வாகனம் திரும்பி சென்றது. அதன் பிறகு நுழைவாயில் கேட்டை முடியபோது, கேட்டின் அடிப்பகுதியில் பழுது ஏற்பட்டதால், ஒரு பகுதி வீல் அச்சிலிருந்து சரிந்து திடீரென கீழே விழுந்தது. அப்போது, கேட்டின் அருகே நின்று கொண்டிருந்த சீனியர் இன்ஜினியர் நற்குணன் (55) மற்றும் ஆர்.பி.எப் காவலர் லட்சுமணன் (41) ஆகிய இருவரும் கேட்டின் கிழே சிக்கி படுகாயமடைந்தனர்.