சென்னை: தமிழகத்தில் 5 கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மாநில தொழில் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ்சேகர், மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த அன்பழகன் மாற்றப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் சமூக நலத்துறை இணை செயலாளராக இருந்த கார்மேகம், சேலம் கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாவட்ட கலெக்டராக இருந்த ராமன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியம், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த சந்திர சேகர் சகாமுரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் கமிஷனராக இருந்த சிவராசு, திருச்சி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த திவ்யதர்ஷினி, தருமபுரி கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி கலெக்டர் கார்த்திகா, மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.