கேரள காங்கிரஸ் தலைவர் பெயரில் பண மோசடி

திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இவரது பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கில், தனக்கு நிதியுதவி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் ஏராளமானோர் பணம் அனுப்பினர்.இது தொடர்பாக பலர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். நிதியுதவி அளிக்குமாறு தான் பேஸ்புக்கில் எதுவும் குறிப்பிடவில்ைல எனவும் கூறினார். அப்போதுதான் அது போலியான பேஸ்புக் கணக்கு என்பது தெரியவந்தது.

இதுபோல தலசேரி பகுதியை சேர்ந்த நவுஷாத் தனது பேஸ்புக் பக்கத்தில், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரது ஆயுளுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவை தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் டிஜிபிக்கு முல்லப்பள்ளி ராமச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: