போபால்: மாட்டு கோமியத்தை நாள்தோறும் குடித்து வந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தவறான தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜக உறுப்பினரான பிரக்யா சிங் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு கோமியம் மற்றும் பால் பொருட்களை கலந்து உண்டால் புற்றுநோய் குணமாகும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்; பசுவின் சிறுநீர் கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று நோயை குணப்படுத்துகிறது.