இந்தியா யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி!: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..!! May 17, 2021 யோகி ஆதித்தியநாத் நெருக்கடி RB பஞ்சாயத்து தேர்தல்கள் கொரோனா லக்னோ: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 1621 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கக்கூடிய அதிர்ச்சி தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15, 19, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை உத்திரப்பிரதேச அரசு ஈடுபடுத்தி இருந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் யூனியன் தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது, தேர்தல் பணியில் ஈடுபட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களில் 1621 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்