சென்னை: கொரோனாவால் ஏற்படும் மரணம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.